Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி இணையதள பாதுகாப்பு குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இரண்டாம் ஆண்டு IT ல் பயிலும் மாணவி செல்வி K.கனிஷ்கா வரவேற்புரையாற்றினார்.
T. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மோகனராம், ராகுல் குமார் (web designers- JKKN Educational Institutions ) கலந்து கொண்டனர். IT ஆய்வகத்தில் நடைபெற்றது.
JKKNCET ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட கணிப்பொறி பாதுகாப்பு நிகழ்வில் தரவுகளை உருவாக்கி அதனை எவ்வாறு பாதுகாப்பாக சேமிப்பது மற்றும் திறம்பட நிர்வகிப்பது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
சைபர் பாதுகாப்பு, Ethical Hacking பற்றி விவரிக்கப்பட்டது. மற்றும் தரவுகளை எவ்வாறு virus இடம் இருந்து பாதுகாப்பது, எவ்வாறு cyber crime இடம் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
IT துறையில் சைபர் செக்யூரிட்டி இன் பங்களிப்பு & இனிவரும் காலங்களில் இதன் இன்றியமையா பயன்பாடு குறித்து விவரிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக இரண்டாம் ஆண்டு IT ல் பயிலும் மாணவி செல்வி. P.லத்திகா நன்றியுரையாற்றினார்.